அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சென்னை : ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறிஉள்ளனர்.
ரஜினி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, அதிருப்தி நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். அதில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, அழைப்பு விடுத்து வரும், 10ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, வடசென்னை மாவட்ட செயலர் சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில், ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து, 10ம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். அதில், நம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் அறிக்கை: உடல் நலம் கருதி, தேர்தல் அரசியலுக்கு தற்பொழுது வரவில்லை என்ற அறிக்கையை, ரஜினி வெளியிட்டிருந்தார். அதை திரும்ப பெற செய்யும் நோக்கத்தில், மன்ற நிர்வாகிகள், வரும், 10ம் தேதி, அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த போராட்டத்திற்கு, நம் தலைமை மன்றம் அனுமதி அளிக்கவில்லை.எனவே அனைவரும், ரஜினியின் முடிவுக்கு கட்டுபட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை,பொறுமை காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.