‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தேர்ட் ஐ மீடியா என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் பயபுள்ள. கே.எஸ்.சரவணன் இயக்குகிறார். கவின், கவிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கபிலேஷ்வர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் சிடியை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று வெளியிட இருக்கிறார்கள். படத்தின் கதைப்படி ஹீரோ ஊர் ஊராக சென்று கிடய் போட்டு பிழைப்பு நடத்துகிறவராம். படத்தின் சண்டைக் காட்சி ஒரு ஆட்டுக்கிடையில் நடக்கிறதாம். இதற்காக பல கிடய்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஆடுகளை கொண்டு வந்து கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாடகையாம். ஆடுகள் வில்லன்களால் கொல்லப்படும் காட்சிகள் கிராபிக்சின் உதவி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். "படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டோம். ஆடுகளை கொண்டு வந்து சேர்க்கவே நிறைய செலவானது. விலங்கு நல வாரிய சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக ஆடுகள் துன்புறும் காட்சிகளை தவிர்த்தோம். சில ஷாட்களை கிராபிக்ஸ் செய்துள்ளோம். படம் பார்க்கும்போது எது ஒரிஜினல், எது கிராபிக்ஸ் என்று தெரியாது" என்கிறார் இயக்குனர் கே.எஸ்.சரவணன்.