கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
வேட்டை மன்னன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதற்கு உள்காரணம் ஒன்று இருக்கிறது. அதாவது, லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வேட்டை படத்தில் ஆர்யா நடித்த வேடத்திற்கு முதலில் சிம்புவிடம்தான் பேசியிருந்தனர். ஆனால் சிம்பு வழக்கம்போல் தனது பாணியில் கதைக்குள் இறங்கி நிறைய கரெக்சன் சொன்னவர், சில நாட்கள் கழித்து வந்து ஒரு புது கதையையே சொல்லி, இந்த மாதிரி ஸ்கிரிப்ட் பண்ணுங்கள். அதுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொன்னாராம். இதனால் அதிர்ச்சியடைந்த லிங்குசாமி கதையை மாற்ற வேண்டாம், கதாநாயகனையே மாற்றி விடுவோம் என்றுதான் பின்னர் சிம்புவை ஏறக்கட்டிவிட்டு அந்த வேடத்துக்கு ஆர்யாவை புக் பண்ணினார். இதெல்லாம் பழைய கதை.
ஆனால் அந்த வேகத்தில் வெளியேறிய சிம்பு, நான் சொன்ன கதையையே வேட்டை மன்னன் என்று படமாக்கி ஜெயித்துக்காட்டுகிறேன் என்று அந்த கதையை வேக வேகமாக படமாக்க தொடங்கினார். ஆனால் பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக படத்தை வருடக்கணககில் சவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், சிம்புவின் வேகம் குறையவில்லை. தோல்வியடைந்த வேட்டையை விட எனது வேட்டை மன்னன் கில்லி மாதிரி சொல்லியடிப்பான். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று தில்லாக பேசிக்கொண்டு திரிகிறார்.