‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
துப்பாக்கி படத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழாம் அறிவு படத்தைப்போல இப்படத்தில் ஒரு புதுவித மெசேஜ் வைத்திருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் முந்தைய படத்தைப்போன்று பெரிய பில்டப் எதையும் இந்த படத்திற்கு வெளியிடவில்லை அவர். இந்த படத்தில மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன் என்கிறார்.
அது என்ன? அதாவது, பல இயக்குனர்கள் தீவிரவாதம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி படமெடுத்து வருகிறார்கள். இதுவும் அந்த பாணி கதைதான் என்றாலும். மக்களில் ஒருவன் எந்த வகையில் பாதிக்கப்படுகிறான். அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப்பற்றிய படமிது. அதனால் ஒவ்வொரு மனிதனும் தீவிரவாதம் போன்ற பிரச்னைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள எந்தமாதிரியான விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்பதைதான் இப்படத்தில் சொல்கிறேன் என்கிறார்.