தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தங்களிடம் வாங்கிய 10 கோடியே 90 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து தரக்கோரி, நடிகர் கமலுக்கு, பிரமிட் சாய்மீரா நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் சாருஹாசன் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு, வக்கீல் ஏ.சிதம்பரம் அனுப்பிய நோட்டீசில் கூறியிருப்பதாவது:தமிழ் மற்றும் இந்தியில் கூட்டாக சேர்ந்து, "மர்மயோகி' என்ற படத்தை 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பதற்காக நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டது.
அப்போது, "மர்மயோகி படத்திற்காக எனது முழு கவனத்தையும் செலுத்துவேன்; இதை தயாரித்து வெளியிடும் வரை, மற்ற படங்களில் நடிக்க மாட்டேன்' என, கமலஹாசன் கூறினார். அதை நம்பித் தான் ஒப்பந்தம் ஏற்பட்டது.இந்தியில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன், ஹேமமாலினி, பிரியங்கா சோப்ரா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முன்பணம் கொடுப்பதற்காக, ஆறு கோடியே 90 லட்சம் ரூபாய் நீங்கள் வாங்கினீர்கள். மேலும், இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக, முன்பணமாக எட்டு கோடி ரூபாய் வாங்கினீர்கள்.நீங்கள் மொத்தம் 10 கோடியே 90 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளீர்கள். ஆனால், இந்தி நடிகர் மற்றும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை, இப்படத்துக்காக உறுதி செய்யத் தவறிவிட்டீர்கள்.இந்நிலையில், பணத்தை திரட்ட முடியவில்லை என்றும், எனவே, வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாகவும் கடந்த பிப்ரவரியில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதுவரை 10 கோடியே 90 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித் தரவில்லை. ஆனால், "உன்னைப் போல் ஒருவன்' என்ற படத்தை நீங்கள் தயாரிக்கிறீர்கள். "மர்மயோகி' படத்துக்காக வாங்கிய பணத்தை, உங்களின் சொந்தப் படத்திற்காக பயன்படுத்திக் கொண்டீர்கள். இது சட்ட விரோதமானது; ஒப்பந்தத்தை மீறுவது.மேலும், "மர்மயோகி' படம் முடிந்து வெளியாகும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளீர்கள். தற்போது, எங்களுக்கு தரவேண்டிய பணத்தைத் தராமல் உங்கள் படத்தின் ஆடியோ கேசட்களை வெளியிட முயற்சி செய்கிறீர்கள். இது தொடர்பாக கடந்த 5ம் தேதி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அதன் பின்னும், பணத்தை நீங்கள் செலுத்தவில்லை.எனவே, 10 கோடியே 90 லட்சம் ரூபாயை 24 சதவீத வட்டியுடன் உடனடியாக செலுத்த வேண்டும். ஒப்பந்தம் ஏற்பட்ட நாள் முதல் (கடந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி) வட்டியை கணக்கிட வேண்டும். பணத்தைத் தர தவறினால், உங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர நேரிடும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.