'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
முன்பெல்லாம் ஒரு படத்தின் ஹீரோ நினைத்தால் அவர்கள் நினைத்த கதாநாயகியை அந்த படத்தில் நடிக்க வைக்கமுடியும். ஆனால் இபபோது அப்படியில்லை, டைரக்டர்கள் முடிவு செய்யும் நடிகைகள்தான் நடிக்கிறார்கள். காரணம், நடிகர்களுக்காக படங்கள் ஓடிய நிலை மாறி, டைரக்டர்களால் மட்டுமே படங்களை ஓடவைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதுதான்.
அதனால் மாற்றான், துப்பாக்கி படங்களில் காஜல் நடித்து வந்த நேரம், மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் அவரை நடிக்க வைப்பதாக சொல்லி, அது எதுவும் நடைபெறவில்லை. இதுசமபந்தமாக அந்த நடிகர்களை காஜல் சந்தித்து பேசியபோது, தங்களது இயலாமையை தெரிவித்திருக்கிறார்கள். அதனால் கோலிவுட்டில் அடுத்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த காஜல், இப்போது பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஏற்கனவே ஸ்பெஷல் ச்சப்பிஸ் என்ற படத்தில் கமிட்டாகியிருப்பவர், அடுத்து இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றி முழுநேர இந்தி நடிகையாகும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார்.