‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
என்னைப் பற்றி நிறைய வதந்திகளை பரப்புகிறார்கள், என்று நடிகை சுனைனா புலம்பி வருகிறார். காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. தற்போது புதுமுகங்கள் ஜோடியாக அவர் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வராததால் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனைனா நடித்த ‘பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தில் புதுமுகம் சபரீஷ் ஜோடியாக நடித்தார். இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் மகன் ஆவார். தற்போது சீனுராமசாமி இயக்கும் நீர்பறவை படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கும் ‘நதிகள் நனைவதில்லை படத்தில் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் ஜோடியாக நடிக்கிறார். வாய்ப்புகள் இல்லாததால்தான் சுனைனா சிறு நடிகர்களுடன் நடிக்கிறார் என்று வெளியாகியுள்ளன. இதனை சுனைனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நல்ல கதையுள்ள படங்கள் எதுவானாலும் நடிப்பேன். சிறிய நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்றெல்லாம் பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.