இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
"தென்மேற்கு பருவக்காற்று" படம் மூலம் திரும்பிய திசை எல்லாம், இசையால் பேச வைத்தவர் ரகுநந்தன். ஜி.வி.பிரகாஷிடம் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும் "கிருஷ்ணவேணி பஞ்சாலை", "சுந்தரபாண்டியன்" போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவர் இசையில் விரைவில் வெளிவர உள்ள அடுத்தபடம் "நீர்ப்பறவை". இந்தபடம் பற்றிய அவரது இசை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ரகுநந்தன்.
நீர்ப்பறவை எனக்கு 4வது படம். எனது முதல் படமே(தென்மேற்கு பருவக்காற்று) தேசிய விருதை பெற்றது பெருமைக்குரிய ஒன்று. இதுவரை எனக்கு கிடைத்த படங்கள் கிராமத்து பின்னணியில் அமைந்த கதைகள் தான் என்னை தேடி வந்தன என்று கூட சொல்லலாம். இதையடுத்து நான் இசையமைக்கப்போகும் சில படங்கள் நகரத்து கதைகள் சொல்லப்போகின்றன. என்னைப் பொறுத்த வரை வெறும் சப்தத்தால், இசையை நிரப்ப முடியாது. அதில் ஒரு ஜீவன் இருக்க வேண்டும். அந்த பாட்டிற்கு உயிர் கிடைக்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன். மேலும் இப்போது நான் இசையமைத்துள்ள நீர்ப்பறவையில், ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன். ஒரு பாடலை 3 விதமாக வெஸ்டர்ன் கிளாசிக்களின் கொண்டு வந்துள்ளேன்.
"பற பற பறவை..." ஒன்று என்று ஆரம்பிக்கும் பாடலை 3 நிலைகளில் கொடுத்துள்ளேன். இப்படத்தின் கடைசிபாடலும் க்ளைமாக்ஸ் பாடலும் இதுதான். ஜி.வி.பிரகாஷ், சின்மயி, ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். நீர்ப்பறவை படத்தின் கதைக்களம் 1980களில் நடைபெறுவதால், மிக மென்மையான, இசையால் இழையாட விட்டிருக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் இசை கலந்திருக்கும். கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தும் கதை இருப்பதால், அதுசம்பந்தப்பட்ட இசையையும் கொஞ்சம் சேர்த்துள்ளேன். சர்ச்சில் இருந்து தொடங்கும் "தேவன் மகளே..." என்ற பாடல் மிக அருமையாக அமைந்துள்ளது. நீர்ப்பறவை படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுக்கும் ஒரு பின்னணி இசை அமைத்துள்ளேன். படத்தோடு பார்பதற்கு, கொஞ்சம் சுகமாக இருக்கும். கிட்டத்தட்ட 30நாட்கள் ரெக்கார்டீங் வேலையை செய்துள்ளேன். ஒவ்வொரு படத்துக்கும் உயிர் கொடுத்து தான் வேலை பார்க்கிறேன். ஆனால் இந்தபடத்தில் நான் ஒரு புதிய முயற்சியை செய்திருப்பதாக கருதுகிறேன். நிச்சயம் இந்தப்படம் எனக்கு வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தார்.