போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வருடத்துக்கு மூன்று படமாவது கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். ஆனால் எப்படியோ ஆதிபகவன் படத்தில் இரண்டு வருடத்துக்கு மேல் வகையாக மாட்டிக்கொண்டார். அதன்காரணமாக அவர் நடித்த படம் ரசிகர்களின் பார்வைக்கு வந்து ரொம்ப காலமாகி விட்டது என்கிற நிலை உள்ளது.
இதுபற்றி ஜெயம் ரவி கூறும்போது, இப்போதைய ரசிகர்கள் ரொம்பவே வேகமாக இருக்கிறார்கள். தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் அடிக்கடி திரைக்கு வர வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள். அதனால் அவர்களது வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் குறைந்தது வருடத்துக்கு மூன்று படம் இல்லையென்றாலும் இரண்டு படமாவது திரைக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். அதனால்தான் என் படம் வெளியாகி வருடக்கணக்கில் ஆகி விட்டதால் ரொம்பவே பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மேலும், இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, எந்த இயக்குனரிடமும் வருடக்கணக்கில் சிக்க மாட்டேன். குறைந்து மூன்று, நான்கு மாதங்களில் ஒரு படம் சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக்கொடுத்து விட்டு அடுத்த படத்தில் இறங்கி விடுவேன் என்கிறார்.