Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜந்தா படம் பார்க்க டிக்கெட் பத்து ரூபாய்: தயாரிப்பாளர் தாராளம்!

30 செப், 2012 - 05:03 IST
எழுத்தின் அளவு:

ராஜ்பாரவிசங்கர் என்பவர் மருந்து மொத்தவியாபாரி. அவருக்கும் சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு அஜந்தா என்ற படத்தை தயாரித்தார். அதை திருமாவளவன் என்பவர் இயக்கினார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாரானது. இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் என்ற தமிழக அரசின் விருதையும் பெற்றார். ஆனால் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கருக்கும், இயக்குனர் திருமாவளவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ராஜ்பா ரவிசங்கர் இயக்குனரை நீக்கிவிட்டு தானே இயக்குனர் என்று விளம்பரம் செய்தார். இதனை எதிர்த்து திருமாவளவன் இயக்குனர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க்திலும் முறையிட்டார். இரு சங்கமும் பஞ்சாயத்து பேசி இயக்குனர் என்று திருமாவளவன் பெயரைத்தான் போட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இந்தக் கோபத்தில் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரும் படத்தை வெளியிடாமல் கிடப்பில் போட்டார். பின்னர் தெலுங்கில் வெளியிட்டார். அங்கு படம் பெருசாக போகவில்லை. இப்போது தமிழில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இயக்குனர் என்று தனது பெயரையும் திருமாவளவன் என்ற பெயரை திருமால் என்று சுருக்கி போட்டும் படத்தை வெளியிடுகிறார். படம் பார்க்க வருகிறவர்கள் படத்தின் பேப்பர் விளம்பரத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு டிக்கெட் விலை 20 ரூபாய் என்றும், சனி ஞாயிற்று கிழமையில் டிக்கெட்டின் விலை வெறும் பத்து ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறார். அஜந்தாவின் தமிழ் பதிப்பில்  ரமணா நடித்துள்ளார். மற்ற மொழிகளில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். வந்தனா குப்தா என்ற மும்மை மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார், சுமார் 5 கோடியில் தயாரன இந்தப் படம் இப்போது வெளிவருகிறது.

படத்தின் கதை இதுதான். ஒரு மேடைப்பாடகனுக்கு சினிமாவில் பாடகராக வேண்டும் என்று ஆசை. ஒரு கோவிலில் பாடும்போது அங்கு ஒரு பாடகியை சந்திக்கிறார். அவள் பேரழகி, நன்றாக பாடுவள் ஆனால் பார்வைதிறன் அற்றவள். அவளுக்கு பார்வை திரும்புவதற்காக இவன் பாடி பாடி சம்பாதிக்கிறான். சினிமாவில் பெரிய பாடகனாகிறான். அவளது கண் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லும்போது விமான விபத்தில் இறந்து விடுகிறான். பார்வை திரும்பும் இவள் அவனை பார்க்க விரும்புகிறாள். இப்படி 80களில் எல்லோரும் துவைத்து காயப்போட்ட கதைதான் இது. இதன் இயக்குனர் திருமாவளவன் அதன்பிறகு வெண்மணி என்ற படத்தை எடுத்து அதன் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டத்தை கொடுத்தவர். இந்த தயாரிப்பளர் பத்து ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் படத்தை வெளியிடுகிறர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க சாமி....

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in