நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் பரத் கூறியுள்ளார். கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் பரத். இவர் நடித்த திருத்தணி படம் விரைவில் வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான். கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை சுற்றி பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு நடிகை சஞ்சனாவுக்கும், இவருக்கும் காதல் என்பதுதான்.
இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இல்லை. இவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை. எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.