‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"பொம்மலாட்டம், ஆனந்த தாண்டவம் படங்களில் கதாநாயகியாக நடித்த, பெங்களூரு பெண் ருக்குமணி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, "கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். "சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த உங்களுக்கு, ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி வந்தது? என, ருக்குமணியிடம் கேட்டபோது, "நான் கற்றுக் கொண்ட பரத நாட்டியம் தான், எனக்கு சினிமா வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. நான் நடித்த படங்களில், என் நாட்டிய திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்தது; அனைவரும் பாராட்டினர். ஏனோ, தொடர்ந்து பட வாய்ப்பு வரவில்லை. அதனால், பெங்களூரு சென்று, என் நாட்டிய பள்ளியை கவனித்து வந்தேன். திடீர் என்று ஒரு நாள், ரஜினி மகள் சவுந்தர்யா, என்னை தொடர்பு கொண்டு, "கோச்சடையான் படத்தில், ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டார். உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். படப்பிடிப்பின்போது ரஜினி, அவரின் சொந்த தங்கை போல, என்னிடம் அன்பு காட்டினார். இதை, என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது, என்கிறார் ருக்குமணி.