ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆர்.பாலமுருகன், 7வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மெரினா என்ற தமிழ் சினிமா படத்தை பாண்டிராஜ் இயக்கி, தயாரித்தார். இந்த படத்தின் தயாரிப்புக்காக ரூ.50 லட்சம் செலவு செய்தேன். என்னை இணை தயாரிப்பாளராக பாண்டிராஜ் சேர்த்துக்கொண்டார். ஆனால் படம் வெளியானபோது, அதில் என் பெயரை சேர்க்கவில்லை.
இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மெரினா படத்தை தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்து, செப்டம்பர் 14ம்தேதி வெளியாக உள்ளதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் படம் வெளியானால், எனக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே தெலுங்கு மொழியில் மெரினா படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், மெரினா படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 17ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.