‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு இப்போது ஆளாளுக்கு படம் தயாரிக்கவும், இயக்கவும் வந்துவிட்டார்கள். சுமாரன அழகுள்ள மலையாளத்து தேவதைகளும் ஹீரோயின் ஆசையோடு சென்னைக்கு படை எடுக்கிறார்கள். மும்பையில் உள்ள மாடலிங் ஏஜெண்டுகளும் நடிகைகளை கோடம்பாக்கத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கும் புதுமுக ஹீரோயின்கள் படும்பாடு ரொம்பவே கஷ்டமானது. படத்துக்கான போட்டோ ஷூட்டிலேயே பாடாய் படுத்திவிடுவார்கள். அறிமுகமாகும் படம், பெரிய ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவு இருப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்து போய்விடுகிறார்கள் புதுமுக நடிகைகள். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள். இது சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் ஹீரோ ரோஷனும், ஹீரோயின் டிவிங்கிளும்தான் இப்படி போஸ் கொடுத்திருக்கிறார்கள். ஹீரோதான் தயாரிப்பாளர் என்பதால் பாவம் ஹீரோயினால்தான் என்ன செய்ய முடியும். இது இந்த திரைப்படத்தின் போட்டோக்களில் கொஞ்சமேனும் நாகரீமாக இருக்கும் ஸ்டில். அப்படியென்றால் மற்ற படத்தின் தரத்தையும். அந்த நாயகியின் நிலையையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.