ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற குடும்ப படங்களை இயக்கிய டைரக்டர் தங்கர் பச்சான், தற்போது அம்மாவின் கைப்பேசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிகளின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். படத்தில், இரண்டு பேருக்கும் முத்த காட்சி இருக்கிறது. சாந்தனுவின் உதட்டில் இனியா முத்தம் கொடுப்பது போல் அந்த காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி டைரக்டர் தங்கர்பச்சான் அளித்த பேட்டியில், ஒரு கிராமத்தில், 8 பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது. கதைப்படி, எட்டாவதாக பிறந்த கடைசி பிள்ளை, சாந்தனு. அவருடைய மாமா மகள் இனியா. சாந்தனு வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் தனது முறைப்பெண்ணுக்கு உள்ளாடைகள் வாங்கிக்கொண்டு அவளுக்கு பரிசளிக்க செல்கிறான். அதை வாங்கிக்கொண்ட இனியா, அன்றைக்கு என்கிட்ட ஏதோ ஒண்ணு கேட்டியே... என்ன அது? என்றபடி சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார். இந்த காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறோம், என்றார்.




