Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தண்டவாளப் பயணி நான்! பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!!

15 ஜூன், 2012 - 10:05 IST
எழுத்தின் அளவு:

மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி 950க்கும் அதிகமான பாடலாசிரியர்கள் பேனா பிடிச்ச தமிழ் திரை உலகத்துல முன்னணி பாடலாசிரியர்ங்கற அந்தஸ்தை பெற்ற மிகச்சிலர்ல இவரும் ஒருத்தர். அறிமுகமாகி 13 வருஷத்துல 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதிக் குவிச்சு இருக்கற எழுத்து எந்திரம் நா.முத்துக்குமார். மெட்டைக் கேட்ட உடனே வந்து விழுற பாடல்வரிகள் மாதிரி, நாம கேள்விகளை கேட்டு முடிச்சவுடனே அதிரடியா வந்து விழுது... முத்துக்குமாரோட அழகான பதில்கள்.

கவிஞருக்கும் பாடலாசிரியருக்குமான வித்தியாசம்?

கவிதைங்கறது ஒத்தையடிப்பாதை மாதிரி. பாதையையும், இலக்கையும் நம்ம விருப்பப்படி அமைச்சிக்கலாம். ஆனா, சினிமா பாடல்... தண்டவாளத்து மேல பயணிக்கிற மாதிரி. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தடம் புரளாம பயணிக்கனும்.

ஹாலிவுட் படங்களில் பாடல்கள் இல்லாதபோது, இந்திய படங்களில் தேவையா?

தாலாட்டுல இருந்து ஒப்பாரி வரைக்கும் பாடல்கள் வழியா வாழ்க்கையை சொல்றது தான் நம்ம பாரம்பரிய பழக்கம். உலக அளவுல இந்திய திரைப்படங்களோட அடையாளமே பாடல்கள்தான். இது இல்லைன்னா நம்மோட தனித்துவமே போயிடும்.

ஒரு நல்ல பாடலுக்கான வரிகள் எப்படி இருக்க வேண்டும்?

வார்த்தைகள் எளிமையா இருக்கணும். தேவைப்படுற இடங்கள்ல அழகும், கம்பீரமும் அந்த வார்த்தைகளோட கை கோர்க்கணும். எங்கேயோ பார்த்த காட்சியை, எப்போதோ அனுபவித்த உணர்வை ஞாபகப்படுத்தி கேட்கறவங்களை தொந்தரவு பண்ணனும்.

திரையிசை பாடல்கள் தவிர்த்து வேறு இலக்கிய முயற்சிகள்?

நான் பிறந்து வளர்ந்த காஞ்சி மாநகரத்தோட 600 ஆண்டுகால வரலாற்றை பத்தி பல ஆராய்ச்சிகள் பண்ணி, கடந்த பத்து வருடங்களா நான் எழுதிட்டு இருக்கற ஆங்கில நாவலான சில்க் சிட்டியை சீக்கிரமே வெளியிடற முயற்சியில மும்முரமா இறங்கி இருக்கேன்.

வருமானத்தைத் தவிர பாடலாசிரியர் பணி வழங்கியது?

சத்தம் போடாதே படத்தோட பேசுகிறேன் பாட்டை கேட்டுட்டு தற்கொலை முயற்சியை கைவிட்டதா சொன்ன பெண்ணோட கண்ணீர் கலந்த நன்றி. உங்க பாடல்வரிகளை பாடித்தான் எங்க பிள்ளைங்க தமிழ் கத்துக்கறாங்கன்னு வெளிநாடுவாழ் தமிழர்கள் சொன்னபோது கிடைச்ச பெருமிதம் என்றார். 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

முருகன் ர - kanchipuram,இந்தியா
16 ஜூன், 2012 - 13:22 Report Abuse
 முருகன் ர நா முத்துக்குமார் வாழ்க பலகாலம் வாழ்த்தும்
Rate this:
muthumanickam - madurai,இந்தியா
16 ஜூன், 2012 - 08:16 Report Abuse
 muthumanickam இன்னொரு கண்ணதாசன்?......
Rate this:
kavi - singapore  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூன், 2012 - 14:33 Report Abuse
kavi nanben da ne nalla varuvada
Rate this:
ரபிக் - Dubai,உகான்டா
15 ஜூன், 2012 - 13:32 Report Abuse
 ரபிக் நா. முத்துக்குமார், உங்கள் வரிகள் வெறும் கவிதை அல்ல பாதுக்கக்பட வேண்டிய காவியம். அது நீங்கள் ஒத்தடி பாதை பயணியாக இருந்தாலும் சரி தண்டவாள பயணியாக இருந்தாலும் சரி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in