ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார். அவருடைய பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன், சிபு தமீனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றன.
எப்படியாவது இந்தப்படத்தின் கேரள உரிமையை கைப்பற்றி விட வேண்டும் என நினைத்து கடந்த சில வாரங்களாகவே பிருத்விராஜ் காய்நகர்த்தி வந்தாராம். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடு சென்றார் பிருத்விராஜ்.
இங்கே கிட்டத்தட்ட பேட்ட உரிமை கைமாறுவதில் தொகை குறித்து இழுபறி ஏற்பட்டதாம். இது வெளிநாட்டில் இருந்த பிருத்விராஜுக்கு தெரியவர, உடனடியாக தான் மட்டும் அங்கிருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டார். இந்த வியாபாரத்தை நல்லபடியாக முடித்துவிட்டு, அடுத்த பிளைட்டிலேயே மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டார் பிருத்விராஜ் விடுமுறை முடிந்து பேட்ட ரிலீசுக்கு சில நாட்கள் முன்பாக கேரளா திரும்புகிறாராம் பிருத்விராஜ்.