ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகி வரும் படம் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிங்கம். பதினெட்டாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போரிட்ட கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது
இந்த படத்தில் குஞ்சாலி மரைக்காயர் ஆக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தில் பிரபு, அர்ஜுன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மோகன்லாலுடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே காலாபாணி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார் பிரபு.
அர்ஜுன் முதன்முறையாக மோகன்லாலுடன் நடிக்கிறார். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது அர்ஜுனும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.