தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் | கமலின் அடுத்த படங்களின் இயக்குனர் பட்டியலில் இவரா? | பாலாவின் அடுத்த பட ஹீரோ: தமிழக தொழிலதிபர் வீட்டு வாரிசு? | 'நுாறுசாமி' படத்தில் அம்மாவாக சுஹாசினி |
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் மிஷ்கின். இவர், புதுமுக நடிகர் மைத்ரேயாவை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மிஷ்கின் சொன்னபடி படம் எடுக்கவில்லை, மாறாக அதே கதையை உதயநிதியை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மைத்ரேயா, மிஷ்கினுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னை வைத்து படம் இயக்குவதாக சொல்லிய மிஷ்கின், உதயநிதியை வைத்து படம் எடுப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயா, மிஷ்கின் உடன் படம் பண்ண 2015ம் ஆண்டில் ஒப்பந்தோம் போட்டோம். இதற்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி, ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்தோம். துப்பறிவாளனுக்கு முன்பே படம் பண்ண வேண்டியது. ஆனால் பண்ணவில்லை, துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். ஆனால், இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேச பலமுறை அழைத்து வரவில்லை. அதனால் தான் கோர்ட் வரை செல்லும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விஷாலை சந்திக்க நேர்ந்தது, அவர் உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்றார்.