‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் திலீப் (52) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சொந்த ஊரான மைசூரில் இன்று அவர் மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூரில் வசித்து வந்தார். சில நாட்களாக சிறுநீரக கோளாறும் காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். நேற்று உடல்நிலை மோசமாகி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மரணமடைந்தார். திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கவுள்ளது.