ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பல படங்களில் திறமையாக நடித்தாலும் இன்னும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் காயத்ரி. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக மகாமனிதன் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் வெள்ள ராஜா என்ற வெப் சீரிசிலும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
வெப் சீரிஸ் என்பது சினிமாவுக்கு மாற்றல்ல. சினிமாவின் இன்னொரு பரிமாணம். பல மணி நேரம் செலவு செய்து தியேட்டருக்கு போக முடியாதவர்களுக்கு இது ஒரு களம்.
வெளிநாடுகளில் எப்போதோ வந்துவிட்டது. நம்நாட்டில் இப்போதுதான் வந்திருக்கிறது. வெப் சீரிஸ் பெருகினாலும், சினிமாவுக்கான ஆடியன்ஸ் எப்போதும் இருப்பார்கள்.
வெள்ள ராஜாவில் நான் வழக்கறிஞராக நடிக்கிறேன். இயற்கை வளங்களை காப்பாற்ற கார்பரேட் கம்பெனிகளை எதிர்த்து போராடுகிற துணிச்சலான கேரக்டர். நடிக்கிறதுக்கு நிறைய இடம் இருக்கு. வெப் சீரிசில் நடித்தாலும் சினிமாதான் என் பர்ஸ்ட் சாய்ஸ். இரண்டிலும் பயணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக இரண்டையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை. எந்த வடிவிலாவது ஆடியன்சுக்கிட்ட நாம போய் சேரணும். அதுதான் முக்கியம். என்கிறார் காயத்ரி.