ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை மெஹ்ரின். தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்திருந்தார். பஞ்சாபைச் சேர்ந்த இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் சுதிர்பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க மெஹ்ரின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக தயாரிப்பார் குஷி அவருக்கு முன்பணமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் படத்தில் இருந்து ஹீரோ கதிர்பாபு விலகி விட்டார். அவருக்கு பதிலாக சிரஞ்சீவியின் மருமகன் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். புதிய ஹீரோ கல்யாண், மெஹ்ரினுக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்.
இதனை மெஹ்ரினிடம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஆத்திரம் அடைந்த மெஹ்ரின் "அட்வான்சை திருப்பத் தரமுடியாது. நான் கொடுத்த தேதிகளை வீணடித்து விட்டீர்கள். அந்த தேதிகளில் வந்த இரண்டு பட வாய்ப்புகளை நான் இழந்து விட்டேன். நான் நடிக்காவிட்டால் நீங்கள்தான் எனக்கு இழப்பீடு தரவேண்டும்" என்று கூறிவிட்டார். இது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் குஷி புகார் கொடுத்துள்ளார். மெஹ்ரினும் விளக்கம் கொடுத்துள்ளார்.