ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது, சில தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக திரும்பி உள்ளனர். அவர்கள் சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். அதை உடைக்க முயன்ற விஷால் நேற்று கைது செய்யப்பட்டு இரவு விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்வுகள் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும், கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டிருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.