ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'என் திரையுலக வாழ்க்கையை முடக்க சதி நடக்கிறது. அதை முறியடித்து, பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றி நடை போடுவேன்' என, ஆவேசப்படுகிறார், நடிகை சோனாக் ஷி சின்ஹா. சமீபத்தில், இவர் மீது, பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில், விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வருவதாக கூறி விட்டு, வராமல் ஏமாற்றி விட்டதாகவும், இதற்காக வாங்கியிருந்த முன்பணத்தை தரவில்லை என்றும், சோனாக் ஷி மீது, தொழில் அதிபர் ஒருவர், போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தான், சோனாக் ஷி மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ''சம்பந்தமே இல்லாமல், அந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர். பாலிவுட்டில் என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான், இதைச் செய்துள்ளனர்,'' என, கோபத்தில் கொந்தளிக்கிறார், சோனாக் ஷி.