‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தில், ஜித்து என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.
விழா தொகுப்பாளர்கள், படத்தின் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோரையும் பேச வைத்தனர். அப்போது, ரஜினியின் படங்களில் தங்களுக்கு பிடித்த வசனத்தை பேசிக் காட்டலாம் என கூறினர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அனைவரும், ரஜினி நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்த வசனங்களை மேடையில், பேசிக் காட்டி கைத்தட்டல் வாங்கினர். ஆனால், மைக் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி, கடைசி வரை, ரஜினி பட வசனம் எதையும் பேசவில்லை. ஆனால், நடிகர் ரஜினியை பாராட்டி பேசினார்.
'ஏன் இப்படி செய்தீர்கள்?' என நிருபர்கள் கேட்டபோது, 'தெரியாத எதையும் நான் எப்போதும் செய்ய மாட்டேன். நான் எப்போதும் நானாகவேதான் இருக்க ஆசைப்படுவேன். என்னை, எனக்கேற்ற கேரக்டரில் நடிக்கச் சொன்னால் மட்டுமே என்னால் சிறப்பாக நடிக்க முடியும். இன்னொருவர் போல பேசு; நடி என்றால், அது என்னால் முடியாது. நான் ஏற்கனவே கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற போது, அங்கு நடிப்புக்காக வரும் பலரும் ரஜினியைப் போல நடித்துக் காட்டுவர். அதை நான் வியப்பாகத்தான் பார்ப்பேன். ஒரு நாளும், அப்படியெல்லாம் நடித்ததில்லை' என கூறியிருக்கிறார்.