ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் அரசு முன்னெடுக்கும், "பெண்கள் சுவர்" நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், அந்த அறிவிப்பை, மலையாள நடிகை மஞ்சு வாரியர் வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
சபரிமலை விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்ட, வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பெண்களை வரிசையாக நிறுத்தி, "பெண்கள் சுவர்" அமைக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்த "பெண்கள் சுவர்" நிகழ்வில், பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். அரசியல் கலப்புள்ள நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதால், அதில் பங்கேற்க தாம் விரும்பவில்லை என்றும் மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.