‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைக்கு தொலைக்காட்சியில் படம் பார்க்கிறவர்கள். ஏதாவது பழைய கருப்பு வெள்ளை படத்தில் ஒரு காமெடி நடிகரை பார்ப்பார்கள். தன் அகன்ற விழிகளால் சிரிக்க வைப்பார். அவர் டி.ஆர்.ராமச்சந்திரன் என்பதும், அவர் 25 படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்பதும், அவர் ஹீரோவாக நடித்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி 2வது ஹீரோ என்பதும், அவரது கால்ஷீட்டுக்காக பல நிறுவனங்கள் காத்திருந்ததும் பலருக்குத் தெரியாது. அவரைப் பற்றிய சின்ன பிளாஷ்பேக்.
காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கு என்று தனியாக கதை எழுதுவது தொடங்கியது டி.ஆர்.ராமச்சந்திரனுக்குத்தான். இவர் ஹீரோவாக நடித்த 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி இரண்டாவது ஹீரோவாக நடித்தார் . அதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்தார்கள்.
டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.
40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் காமெடி கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தவர். 50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர்.