இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
ரஜினி பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இசை வௌியீட்டு விழாவில் அவர் பேசியதாவது :
நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கம் தான். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது, அது தான் ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போது வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கார்த்திக் சுப்பராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதிலிருந்தே தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படத்துலேயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கும். கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பார். பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கும்.
எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.