ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் துல்கர் சல்மான், அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் துல்கர் சல்மான் நடித்த படங்கள் தமிழில் பெரிய வெற்றி பெறவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்தார் துல்கர் சல்மான்.
அடுத்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தில் நடித்துள்ளார். ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் ரெடியாகி பல மாதங்களாகியும் இன்னும் திரைக்குவராமலே இருக்கிறது. தற்போது 'ஒரு யமந்தன் ப்ரேமகதா' என்ற மலையாளப்படத்திலும், 'த ஸோயா பேக்டர்' என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில், ரா.கார்த்திக் இயக்கத்தில் 'வான்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். கீர்த்தி கர்பந்தா, கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்த நிறுவனம்தான் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தை தயாரித்துள்ளது. அந்தப்படம் பொருளாதார சிக்கலினால் இன்னும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த சூழலில் துல்கர் சல்மான் கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தது திரையுலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.