வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஒருமைப்பாடு தின நிகழ்ச்சி, சென்னை இசை கலைஞர்கள் சங்க வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினாராக உள்ள 22 சங்கங்களைச் சேர்ந்த சிறந்த தொழிலாளர்கள், 22 பேருக்கு நிமாய் கோஷ் விருது வழங்கப்பட்டது. பெப்சி அமைப்பை தொடங்கிய நிமாய் கோஷ் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பண முடிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது : சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சினிமா தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காண தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி கழகம் தொடங்க வேண்டும். சினிமாவை அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் வங்கி கடன் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். நலிந்த சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அரசு வீடுகட்டிக் கொடுக்க வேண்டும். பையனூரில் அமைய இருக்கும் திரைப்பட நகரில் வீடுகட்டும் தொழிலாளர்களுக்கு அரசு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து தர வேண்டும். என்றார்.