ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பின் வழக்கு கேரள ஐகோர்ட்டில் சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. தற்போது கோர்ட்டின் சிறப்பு அனுமதி பெற்று படங்களில் நடித்து வந்தாலும், தனது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டு இருப்பதாகவே திலீப் நினைக்கிறாராம்.
இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக கருதப்படும் ஒரு மெமரி கார்டை அது உண்மைதானா என சோதனை செய்வதற்காக தன்னிடம் கொடுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்தார் திலீப். அந்த கார்டில் உள்ள வீடியோ மார்பிங் செய்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் திலீப்பின் வாதம்.
ஆனால் ஆதாரங்களை அழித்து விடுவார் என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு அந்த மெமரி கார்டை எப்படியாவது கைப்பற்ற திட்டமிட்டுள்ளாராம் திலீப்.