ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரைப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா, வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பும் வழக்கமுடையவர். தேவையில்லாமல் எதையாவது பேசுவார். டுவிட்டரில் பதிவிடுவார். தெலுங்கு முன்னணி ஹீரோக்களையே கண்டபடி கமெண்ட் செய்து டுவிட்டரில் கருத்துக்களைச் சொல்லுவார்.
சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில், “2.0 படம் பெரிய இயக்குனர் சின்ன குழந்தைகளுக்காக எடுத்த படம். பைரவ கீதா படம், சிறிய இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்த படம்,” எனப் பதிவிட்டு சர்ச்சையை உருவாக்கினார். 'பைரவ கீதா' படம் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. அப்படத்தை நாளை நவம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்.
இப்போது சென்சார் டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக படத்தை டிசம்பர் 7ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், உண்மையில் அவருக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் காரணம் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
2.0 படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் மிகப் பெரும் வரவேற்பு இருக்கிறது. 2.0 படத்தால் தன் படத்தை தள்ளி வைத்தேன் என்று அவர் சொல்ல முடியாது அல்லவா, அதனால்தான் டெக்னிக்கல் பிரச்சினை என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.