ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, வேதாரண்யம், பட்டுகோட்டை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் புயலால் பாதித்த இடங்களுக்கு சென்ற நடிகர் பிரஷாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த செய்தி வெளியில் தெரியவில்லை. ரசிகர் ஒருவர் போட்டோ வெளியிட்டதன் மூலமே இந்த செய்தி தெரியவந்துள்ளது. மேலும் அங்கு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுடன் பிரஷாந்த் விரும்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.