பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, வேதாரண்யம், பட்டுகோட்டை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் புயலால் பாதித்த இடங்களுக்கு சென்ற நடிகர் பிரஷாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த செய்தி வெளியில் தெரியவில்லை. ரசிகர் ஒருவர் போட்டோ வெளியிட்டதன் மூலமே இந்த செய்தி தெரியவந்துள்ளது. மேலும் அங்கு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுடன் பிரஷாந்த் விரும்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.




