டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, வேதாரண்யம், பட்டுகோட்டை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் புயலால் பாதித்த இடங்களுக்கு சென்ற நடிகர் பிரஷாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த செய்தி வெளியில் தெரியவில்லை. ரசிகர் ஒருவர் போட்டோ வெளியிட்டதன் மூலமே இந்த செய்தி தெரியவந்துள்ளது. மேலும் அங்கு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுடன் பிரஷாந்த் விரும்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.