ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக நடிகைகள் தங்கள் பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் ஆதரவற்றோர் விடுதி, மாற்றுத் திறனாளிகளின் பள்ளிகளுக்கு சென்று அவர்களுக்கு விருந்து கொடுத்து கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் கோவிலுக்குச் செல்வார்கள்.
ஆனால் நடிகை தன்ஷிகா நேற்று தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார். தனக்கு சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்த பாண்டியன் மாஸ்டரின் பயிற்சி கூடத்திற்கு சென்று அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடினார். குருவுக்கு தட்சணை கொடுத்து அவரை வணங்கினார். அதன் பிறகு அங்கு பயிற்சி பெறும் வீரர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.
பிறந்த நாளில் ஹைலைட்டாக ஒரு சிலம்பாட்டத்தை போட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதுகுறித்து தன்ஷிகா கூறும்போது "எனக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலையும் கொடுத்த இடம் இது. இங்குதான் நான் தமிழ் பாரம்பரிய கலைகளை கற்றேன். இந்த இடம் எனக்கு கோவில் மாதிரி. அதனால்தான் எனது பிறந்த நாளை இங்கு கொண்டாடினேன்" என்றார்.