‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் நடித்த 'வில்லு' படத்தில் இடம் பெற்றுள்ள 'டாடி மம்மி' என்ற ஆபாசமான பாடலை எழுதியவர் விவேகா. இவர் எழுதிய இந்தப்பாடல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்தவிழாவில் பேசும்போது, “திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துகளைப் பரப்பினார். ஆனால், இப்போது 'டாடி மம்மி வீட்டில் இல்லை' எனப் பாடுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து டாடி மம்மி பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேகாவை கடுப்பாக்கிவிட்டது. உடனே தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, “நான் இந்தப் பாடலை எழுதி 9 வருஷம் ஆகுது. இதோட 3 முறை அமைச்சர் ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்துப் பேட்டி கொடுத்திருக்கார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர்” என்று நக்கலடித்திருக்கிறார்.