ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்த அர்ஜூன், ஸ்ருதி ஹரிகரன் மீது 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜூன் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருமே காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினையை மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும்படி ஸ்ருதி ஹரிகரனுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று மகளிர் ஆணையத்தின் முன் ஆஜரான ஸ்ருதி ஹரிகரன், அர்ஜூனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மகளிர் ஆணையத்திடம் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளேன். பாலியல் புகாருக்கு தேவையான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் அதனை வெளியிடவோ, அது பற்றி பேசவோ முடியாது. எனக்கு தகுந்த நீதி கிடைக்கும். என்றார். மகளிர் ஆணையம் விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.