ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழங்குடி இன மக்களுக்காக முதன்முதலில் ஆயுதம் ஏந்திப் போராடியவர் பிர்சா முண்டா. அப்போதைய பெங்கால் மாகாணத்தில் இப்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலிஅந்து என்ற ஊரில் பிறந்தவர் பிர்சா. 1890களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தால் கைது செய்யப்பட்டு 25 வயதில் சிறையிலேயே இறந்தவர்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தெரிவித்திருந்தார். பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். இந்தப் படத்திற்கான கதையை இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஆவணங்களைத் திரட்டி எழுதி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதே பிர்சா முண்டாவின் கதையை ஹிந்தியில் படமாக்கப் போவதாக இயக்குனர் பா.ரஞ்சித் தரப்பும் அறிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கோபி நயினார், பா. ரஞ்சித் இருவரும் ஒரே சமயத்தில் பிர்சா முண்டா படத்தை எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது மீண்டும் ஒரு மோதலாகவே பார்க்கப்படுகிறது.
கோபி நயினார் இயக்கி பாதியில் நிறுத்திய 'கருப்பர் நகரம்' படம்தான் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படம் என்ற சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இருவரும் தற்போது பிர்சா முண்டா படம் மூலமாக மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
ஒரே ஒரு வித்தியாசம், பா.ரஞ்சித் படத்தை ஹிந்தியில் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார், கோபி நயினார் தமிழில் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இருவருமே படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்கிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தை ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த 'பியான்ட் த கிளவுட்ஸ்' படத்தை இயக்கிய நமா பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறது. பா.ரஞ்சித் யாரை பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுக்கிறாரோ அவரையே கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
தமிழ்த் திரையுலகில் சர்ச்சைகள் என்பது ஒரு தொடர்கதையாக மாறிவிட்டது. அது பிர்சா முண்டா படத்திலும் தொடர்கிறது.