விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பாக கதை சர்ச்சையிலும், வெளியீட்டிற்குப் பின்பாக அரசியல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் டப்பிங் உரிமை விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தத் தொகையை நான்கு நாட்களிலேயே பெற்று 'சர்கார்' ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக வெளியான தெலுங்கு படமான 'அதுகோ', ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாதது 'சர்கார்' படத்தின் வசூலுக்கு வசதியாகப் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகை அனைத்தும் 'சர்கார்' படத்தின் லாபக் கணக்கில் சேரும் என்கிறார்கள் டோலிவுட்டினர். ஆந்திரா, தெலுங்கானாவைப் போலவே கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைந்துவிட்டது. நான்கு நாட்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.