காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தொண்ணூறுகளில் இருந்தது போல, சமீப வருடங்களாக வெளியாகும் படங்களில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை என்பது நிதர்சனம். முன்பெல்லாம் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் என்றால் விஜயசாந்தி, அவரை தொடர்ந்து வாணி விஸ்வநாத் ஆகியோர் தொடர்ந்து அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்கள்.
தற்போது அந்த இடம் நடிகை பூர்ணாவுக்கு சென்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. காரணம் இந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டியுடன் போலீஸ் கேரக்டரில் பூர்ணா நடித்த 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து போலீஸ் கேரக்டர்களாக அவரை தேடி வருகின்றன.
அந்தவகையில் தற்போது விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு' மற்றும் 'புளூவேல்' ஆகிய படங்களிலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் பூர்ணா. கொடிவீரன் படத்திற்காக அவர் மொட்டையடித்து, அதன்பின் பாப் கட்டிங் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. தற்போது இதே கெட்டப்பில் தான் அனைத்து போலீஸ் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா.