விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தொண்ணூறுகளில் இருந்தது போல, சமீப வருடங்களாக வெளியாகும் படங்களில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை என்பது நிதர்சனம். முன்பெல்லாம் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் என்றால் விஜயசாந்தி, அவரை தொடர்ந்து வாணி விஸ்வநாத் ஆகியோர் தொடர்ந்து அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்கள்.
தற்போது அந்த இடம் நடிகை பூர்ணாவுக்கு சென்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. காரணம் இந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டியுடன் போலீஸ் கேரக்டரில் பூர்ணா நடித்த 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து போலீஸ் கேரக்டர்களாக அவரை தேடி வருகின்றன.
அந்தவகையில் தற்போது விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு' மற்றும் 'புளூவேல்' ஆகிய படங்களிலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் பூர்ணா. கொடிவீரன் படத்திற்காக அவர் மொட்டையடித்து, அதன்பின் பாப் கட்டிங் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. தற்போது இதே கெட்டப்பில் தான் அனைத்து போலீஸ் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா.