ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏற்கனவே கத்தி தற்போது சர்க்கார் என தான் இயக்கும் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அப்படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை எழுவதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அவருடைய அசோசியேட் டைரக்டர் ஜெகன் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸுக்காக உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக படத்துறையில் பல காலமாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் கதை தொடர்பாக, தன் மீது தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வருவதால் இனி யாரிடமும் கதை கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தன்னுடைய தயாரிப்பில் சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்காகத்தான் கதை கேட்டு வந்தாராம். இனிமேல் அப்படி கதை தேவைப்பட்டால் தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு அவர்களையே இயக்குனராக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல தன்னுடைய பெயரை சொல்லி இனி யாரும் யாரிடமும் கதை கேட்கக்கூடாது என்றும் தன் சகாக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?