விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விவகாரம் கதைத் திருட்டு. 'சர்கார், 96' ஆகிய படங்களின் கதைகள் தங்களுடைய கதை என்று சிலர் புகார் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து மேலும் பலர் தங்களது கதைகளும் பறி போனது என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றோடு, உதவி இயக்குனர்கள் அடங்கிய வாட்சப் குழுக்களில் ஒரு தயாரிப்பாளரைப் பற்றிய தகவல் ஒன்று பரபரப்பாகப் பரவி வருகிறதாம். டிவி பெயரைக் கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் அப்போது படங்களைத் தயாரிப்பதற்காக கதைகளைக் கேட்ட விதத்தில் சுமார் 400 பவுண்டட் கதைகளை வாங்கினாராம். அவற்றில் சில கதைகள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பித் தரப்பட்டதாம்.
அந்த நிறுவனம் தமிழில் எடுத்த தொடர் தோல்விப் படங்களால் தமிழ் சினிமாவே வேண்டாம் என மும்பைக்கே சென்றுவிட்டது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வந்த படங்கள் மீதும் கதைத் திருட்டு புகார்கள் உள்ளன. ஹாலிவுட் படக் கதைத் திருட்டு புகார் கூட இருக்கிறது என்கிறார்கள். அந்த 400 கதைகளில் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட படத்தின் கதை கூட இருக்கிறது என்றும் தகவல் உண்டு.
அந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட கதைகளை திரும்ப வாங்க முயற்சி செய்யுங்கள் என பல உதவி இயக்குனர்களும் தகவல்களைக் பரிமாறிக் கொண்டிருக்கிறார்களாம்.