‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே 'சர்கார்' கதை விவகாரம் தான் சுடச்சுட ஓடிக் கொண்டிருக்கிறது. இதில், செல்பி விவகாரத்தில் சிவகுமார் வருத்தம் தெரிவித்த வீடியோ கூட பின்னுக்குப் போய்விட்டது.
சினிமா என்பது நடிகர்களைச் சுற்றி இல்லை, நல்ல கதையைச் சுற்றி மட்டுமே இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதையாசிரியர் என்று இருந்தார்கள். ஆனால், இன்று அப்படி ஒரு இலாகா இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சில பெரிய இயக்குனர்கள் கூட வெளியிலிருந்து கதையை வாங்கி, திரைக்கதை, இயக்கம் என மட்டும் தங்களது பெயர்களைப் போட்டுக் கொண்டு வெற்றி பெற்றதுண்டு.
இன்றைய பல இயக்குனர்கள் அவர்களது உதவியாளர்களின் கதைகளையோ, வேறு யாருடைய கதைகளையோ வாங்கி அவர்களது பெயரைப் போட்டுக் கொள்ளத்தான் விரும்புகிறார்கள். வாய்ப்புக்காகவும், சூழ்நிலைக்காகவும் அப்படி தங்களது கதைகளைத் தொலைத்த பல உதவி இயக்குனர்கள் உண்டு.
'சர்கார்' கதை விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் ஆக இருக்கும் பாக்யராஜ், எந்த அச்சமும் கொள்ளாமல் தங்களது சங்க உறுப்பினர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக இருந்து அவர்களது சங்கத்திற்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
பாக்யராஜின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம், கடந்த வாரம் வரை இந்த விவகாரத்தில் ஆவேசமாகப் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென 'சரண்டர்' ஆகி பல்டி அடித்தது குறித்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.