ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு, நடிகை ஒருவர் கடத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக சினி பெண்கள் நல அமைப்பு ஒன்றை துவங்கினார்கள்.
நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான நடிகை மஞ்சு வாரியரும், இந்த அமைப்பு துவங்கும்போது இதில் ஆர்வமுடன் இணைந்தார். அதன்பின் கடந்த ஜூலையில் இவர் இந்த அமைப்பில் இருந்து விலகியதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த பெண்கள் அமைப்பில் உள்ள பார்வதி, ரேவதி ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் மலையாள நடிகர் சங்கத்தையும், திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்த மோகன்லாலையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதில் எதிலும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல யாரைப்பற்றியும் வாய் திறக்காமல் ஒதுங்கி இருக்கிறார் மஞ்சு வாரியர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த பெண்கள் நல அமைப்பினர் கூட்டத்தில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. மோகன்லாலுக்கு எதிராகவோ, திலீப்பிற்கு எதிராகவோ அல்லது பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவோ கூட மஞ்சு வாரியர் குரல் கொடுக்காதது நடிகைகள் அமைப்பில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாம்.