‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. இவரின் வாழ்க்கையை படமாக்க போவதாக இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்கள். மூவரும் தனித்தனியாக படம் எடுக்க உள்ளனர்.
பிரியதர்ஷினி இயக்கும் படத்திற்கு தி அயர்ன் லேடி என பெயரிடப்பட்டு சமீபத்தில் போஸ்டரும் வெளியானது. நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கிறார். மற்ற இரண்டு இயக்குநர்களும் ஜெ., படத்தை இயக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமியும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளார். இதை அவர் தெரிவிக்கவில்லை, திவாகரன் மகன் ஜெயானந்த் பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
அம்மாவின் வாழ்க்கை வரலாறு, தனித்துவம் கொண்ட இயக்குநர், எனது நண்பர் திரு.லிங்குசாமியால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சசிகலாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.