மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
விரும்மாண்டி, எம் மகன், சண்டக்கோழி, சிவப்பதிகாரம், பைரவா, மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் சண்முகராஜன். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது இதே சீரியலில் நடிக்கும் நடிகை ராணி, சென்னை, செங்குன்றம் போலீசில் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி, சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார். என் உடலில் அங்கும், இங்கும் தொடுகிறார். தனியாக அவரது ரூமிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். இதை என் கணவர் தட்டி கேட்டபோது அவரையும் அடிக்க பாய்ந்தார் என்றார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வரும் வேளையில், நடிகர் சண்முகராஜன், செங்குன்றம் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சண்முகராஜன், ராணியிடம் மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் ராணி, புகாரை வாபஸ் பெற்றார்.