தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
நிதி சிக்கலில் இருக்கும் தென்னிந்திய படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சங்கத்துக்கு இளையராஜா உதவுகிறார். இதுகுறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 1991ம் ஆண்டு தென்னிந்திய படத் தொகுப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் படத் தொகுப்பாளர்கள் சங்கத்துக்கு சொந்தமாக இடம் வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் இளையராஜாவை அணுகியபோது, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி சங்கத்திற்கு இடம் வாங்கிக் கொடுத்தார் இளையராஜா. அதை இன்று வரை நாங்கள் மறக்கவில்லை.
இன்றைய தொழில்நுட்ப தாக்கத்தால் படத் தொகுப்பாளர்கள் சங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் இளையராஜாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் மிகுந்த தாயுள்ளத்தோட எங்கள் சங்கத்திற்கு பொருள் உதவி செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உதவிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.