மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
வைரமுத்து மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
மீடூ குற்றச்சாட்டுக்கள் சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நேற்று விஷால் அளித்து ஒரு பேட்டியில், சினிமாத்துறை மட்டுமின்றி, அனைத்துத்துறை பெண்களுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விசயத்தைப்பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நான் நிற்பேன்.
இதுகுறித்து சினிமாத்துறையில் உள்ள அனைத்து அமைப்பு பெண்களையும் மையப்படுத்தி, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நேர்மையாக விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும்.
மேலும், பாடகி சின்மயி இதுகுறித்து உடனடியாக சொல்லியிருக்க வேண்டும். யாருக்காகவும் அவர் பயந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கவிஞர் வைரமுத்து மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் திருட்டு விசிடி எடுக்கப்பட்ட தியேட்டர்களுக்கு சண்டக்கோழி 2 படம் கிடையாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் அறிக்கை ஒன்றையும் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தியேட்டர்களின் பட்டியலையும் விஷால் வெளியிட்டுள்ளார்.