ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறி வருவது அதிகரித்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீ டூ ஆப்பில் பெண்கள் புகார்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல மலையாள நடிகரும், பார்லிமென்ட் உறுப்பினருமான முகேஷ் மீது மும்பையைச் சேர்ந்த இயக்குனர் டெஸ் ஜோசப் என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
19 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நான் இயக்கினேன். அந்த நிகழ்ச்சியை முகேஷ் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இரண்டு முறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவறாக பேசினார். ஓட்டலில் தனது அறைக்கு பக்கத்திலேயே எனக்கு அறை ஒதுக்கினார். இதுகுறித்து எனது பாஸ் டிரெக் ஓபிரையினரிடம் தெரிவித்தேன். அவர் நிலமையை புரிந்து கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து மும்பை திரும்ப ஏற்பாடு செய்து கொடுத்தார். என்னை அன்று காப்பாற்றிய எனது பாசுக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து முகேஷ் கூறும்போது, 20 ஆண்டுகளுக்க முன்பு நடந்தது எனக்கு நினைவில்லை. டெஸ் ஜோசப் யாரென்றே எனக்குத் தெரியாது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்றார். முகேஷ், நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.