ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது மனதுக்கு சரியென தோன்றிவிட்டால் எந்த கேரக்டரையும் ஏற்று நடிக்க தயங்காதவர் நடிகை பார்வதி. அந்தவகையில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான ஒரு பெண்ணாக, புதிய படமொன்றில் நடிக்கிறார் பார்வதி. அறிமுக இயக்குனர் மனு அசோக் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஆசிப் அலி மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
பாலிவுட்டில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறாரே அதே கதைதான் இதுவா என்றால் இல்லையென மறுத்துள்ளார்கள் படத்தின் கதாசிரியர்கள் பாபி - சஞ்சய் இருவரும். இது உண்மைக்கதையல்ல என்றும், முற்றிலும் தங்கள் கற்பனையில் உதித்த கதை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வரும் நவ-1௦ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்